கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை வென்று, இந்திய வீரர்கள் சர்வதேச அளவில் எந்த போட்டியிலும் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்து, மற்ற இளம் வீரர், வீராங்கனைகளுக்கும் தன்னம்பிக்கையை ஊட்டியுள்ளனர்.
உங்களது மிகச் சிறப்பான பணிக்காகவும், எதிர்காலத்தில் இன்னும் ஏராளமான வெற்றிகளை பெறவும் வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். more details…
Website Checker
LikeLike